sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாமல்லையில் தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அதிகரிப்பு

/

மாமல்லையில் தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அதிகரிப்பு

மாமல்லையில் தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அதிகரிப்பு

மாமல்லையில் தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அதிகரிப்பு


UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM

ADDED : ஜூன் 12, 2024 07:41 AM

Google News

UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM ADDED : ஜூன் 12, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில், தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் மழைமானி என அதிகரித்துள்ளது.

ஓரிடத்தில் வெயில், மழை, காற்றின் ஈரப்பதம், திசை உள்ளிட்ட விபரங்கள் அறிவது, மிகவும் முக்கியமானது. மாமல்லபுரத்தில், முன்பு மழையை அளவிடும் வசதி மட்டுமே இருந்தது. பொதுப்பணித் துறையினர், அத்துறை அலுவலகம் அருகில் உள்ள சாதாரண மழைமானியில் சேகரமாகும் மழைநீர் வாயிலாக, மழை அளவை அளவிடுவர்.

இந்நிலையில், தொல்லியல் துறையினர், கடற்கரை கோவில் வளாகத்தில், வானிலை தொடர்பான பல்வேறு தரவுகளை அறியவும், தானியங்கி வானிலை நிலையத்தை, கடந்த 2021ல் அமைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் அதன் சென்னை மண்டல நிர்வாகத்தினர், அரசு கட்டடக்கலை, சிற்பக்கலை கல்லுாரி வளாகத்தில், தானியங்கி வானிலை ஆய்வு நிலையத்தை, கடந்த மார்ச் மாதம் அமைத்தனர்.

மழை அளவு உள்ளிட்ட விபரங்கள் மட்டும் அறிய வருவாய், பேரிடர் மேலாண்மை நிர்வாகம், தற்போது பொதுப்பணித் துறை அலுவலகம் அருகில், சூரிய ஒளியில் இயங்கும் தானியங்கி மழைமானியையும் அமைத்துள்ளது.

இதில் தாமாக பதிவாகும் தரவுகளை இணையதளம் வாயிலாக, வருவாய் நிர்வாக தலைமையகத்திலிருந்தே அறியலாம். வானிலை தொடர்பான தரவுகளுக்காக, ஒரே ஊரில் தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் தானியங்கி மழைமானி என, அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us