sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கற்கும் கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும்!

/

கற்கும் கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும்!

கற்கும் கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும்!

கற்கும் கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும்!


UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM

ADDED : ஜூலை 09, 2024 10:10 AM

Google News

UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM ADDED : ஜூலை 09, 2024 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:
வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகக்கூட்டம் நடந்தது.

வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகக்கூட்டம் கல்லுாரி கலையரங்கில் நடந்தது.
கூட்டத்தில், முதல்வர் சிவசுப்ரமணியம் பேசியதாவது:

மாணவர்கள், கல்லுாரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டும். தேவையில்லாமல் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும். கல்லுாரி விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தவில்லை என்றால், நேரில் புகார் தெரிவிக்கலாம். கற்கும் கல்வியால் மட்டுமே மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையமுடியும் என்பதை உணர்ந்து, மாணவர்கள் திறம்பட படிக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் பேசுகையில், கல்லுாரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து சிறந்த முறையில் படிக்க வேண்டும்.

படிக்கும் வயதில் மாணவர்கள் தவறான பாதையில் செல்லக்கூடாது. குறிப்பாக, போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது, என்றார். கூட்டத்தில் கல்லுாரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us