sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பெண் ஊழியர்கள் பாதுகாப்பு சுஹ்ருத் செயலி அறிமுகம்

/

பெண் ஊழியர்கள் பாதுகாப்பு சுஹ்ருத் செயலி அறிமுகம்

பெண் ஊழியர்கள் பாதுகாப்பு சுஹ்ருத் செயலி அறிமுகம்

பெண் ஊழியர்கள் பாதுகாப்பு சுஹ்ருத் செயலி அறிமுகம்


UPDATED : டிச 20, 2024 12:00 AM

ADDED : டிச 20, 2024 08:28 AM

Google News

UPDATED : டிச 20, 2024 12:00 AM ADDED : டிச 20, 2024 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின், ஊழியர்களின் பாதுகாப்பில் மருத்துவமனை நிர்வாகங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

சமீபத்தில் கோல்கட்டாவில், பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கர்நாடகாவிலும், டாக்டர்கள், மருத்துவமனைகளில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள், அவ்வப்போது நடக்கின்றன. பணியாற்றும் இடத்திலும், வெளியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூரின் அரசு சார்ந்த ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை, பெண்களின் பாதுகாப்புக்காக, சுஹ்ருத் என்ற பெயரில், மொபைல் செயலி வடிவமைத்துள்ளது.

இது தொடர்பாக, மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:

சுஹ்ருத் என்றால் நல்ல இதயம் என, அர்த்தமாகும். பணியில் உள்ள மருத்துவ ஊழியர்கள், கஷ்டத்தில் சிக்கும் போது ஒருவருக்கு ஒருவர் மனித நேயத்துடன் உதவி கொள்ளும் நோக்கில், இந்த மொபைல் செயலியை வடிவமைத்துள்ளோம்.

சமீப நாட்களாக மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் தாக்கப்படுவது, பாலியல் தொல்லைக்கு ஆளாவது, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை கட்டுப்படுத்த, இப்போது முதன் முறையாக, மொபைல் செயலியை வடிவமைத்தோம்.

சுஹ்ருத் செயலியை, பெண் ஊழியர்கள் தங்கள் மொபைல் போனில் டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பிரச்னையில் சிக்கும் போது, இதை அழுத்தி உதவி பெறலாம். லொகேஷன் ஷேர் செய்து கொள்ளலாம். அபாயத்தில் சிக்கினால், தங்கள் மொபைல் போனை மூன்று முறை ஷேக் செய்தால் போதும். அனைவருக்கும் அலெர்ட் மெசேஜ் செல்லும். மருத்துவமனையில் பாலியல் தொல்லைக்கு ஆளானால், செயலி மூலமாகவே புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us