UPDATED : மார் 10, 2025 12:00 AM
ADDED : மார் 10, 2025 10:26 AM
திருவாடானை :
திருவாடானை ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:
இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை துவக்கப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருவாடானை ஒன்றியத்தில்79 அரசு தொடக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வியை நிறைவு செய்யும் ஐந்து 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 179 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை துவங்கியுள்ளோம் என்றனர்.