sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையுமா தமிழக அரசு?

/

ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையுமா தமிழக அரசு?

ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையுமா தமிழக அரசு?

ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையுமா தமிழக அரசு?


UPDATED : ஜூலை 29, 2025 12:00 AM

ADDED : ஜூலை 29, 2025 08:36 AM

Google News

UPDATED : ஜூலை 29, 2025 12:00 AM ADDED : ஜூலை 29, 2025 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றப்பட வேண்டும் என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மற்றும் படிகள், 2009ல் மாற்றி அமைக்கப்பட்டன. அதற்கு முன், இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 ரூபாயாக இருந்தது. இந்த திருத்தத்திற்கு பின், 5,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், 2009 ஜூன் 1ம் தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், 25,000 ரூபாய் வரை குறைவான ஊதியம் பெறுகின்றனர். இந்த ஊதிய முரண்பாட்டை களைய, 2018ல் அவர்கள் போராடியபோது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., ஆட்சி அமைத்ததும் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். தற்போது வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெறச் செய்து, அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது. தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், 'சம வேலைக்கு சம ஊதியம் என்ற, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us