மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை
UPDATED : பிப் 27, 2026 02:33 PM
ADDED : பிப் 27, 2026 02:35 PM
புதுச்சேரி:
புதுச்சேரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின், கணினி மற்றும் தொடர்பியல் துறை மாணவர்கள், பனிமலர் பொறியியல் கல்லுாரி மற்றும் ஹெக்ஸாவேர் இணைந்து நடத்திய 'டெக்டிவதான் 2.0' கண்டுபிடிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
'கோர் 4' அணியைச் சேர்ந்த ஆமினா பேகம், தனுஸ்ரீ, யாமினி மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 80 அணிகளுடன் போட்டியிட்டு, தங்களின் சிறந்த தொழில்நுட்ப நுணுக்கம், புதுமை சிந்தனை மற்றும் பிரச்னை தீர்க்கும் திறனை வெளிப்படுத்தி, முதல் பரிசாக சாம்பியன் பட்டம் வென்றனர். வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் நேரடி இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணி மாணவிகளை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டினர்.
மாணவர்களிடையே செயல்பாடு சார்ந்த கற்றலை தொடர்ந்து ஊக்குவித்ததற்காக கணினி மற்றும் தொடர்பியல் பொறியியல் துறைத் தலைவர் சரவணன் மற்றும் துறை பேராசிரியர்களை நிர்வாகம் பாராட்டியது.

