UPDATED : மார் 25, 2026 10:39 AM
ADDED : மார் 25, 2026 10:40 AM
புதுச்சேரி:
புதுச்சேரி மாற்று உறுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் சார்பில், புதுச்சேரியில் தேசிய அளவிலான பெத்தாங் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
உறுப்பு மாற்று பெற்றவர்களை வீரர்களாக மாற்றுதல்' என்ற நோக்குடன் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. முகாமின் தொடக்க விழாவிற்கு சங்கத்தின் தலைவர் உபத்ரீஸ் தெலமாஷ் தலைமை தாங்கினார்.
பெத்தாங் இந்தியா சங்க துணைத் தலைவர் பாலுசாமி, ஓ.எப்.ஆர்.ஏ., அமைப்பு நிறுவனர் ராஜ்குமார், சாகா ஸ்போர்ட்ஸ் பெத்தாங் கிளப் பொது செயலாளர் சண்முகம், பெண்கள் மற்றும் மாணவர்கள் பெத்தாங் சங்க பொது செயலாளர் நிர்மல் லகார்டே, ராஜஸ்தான் மாற்று உறுப்பு விளையாட்டு சங்க பொது செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் தேசிய அளவிலான பயிற்சி முகாம்கள் மூலம் புதிய வீரர்களை உருவாக்கவும், பெத்தாங் விளையாட்டை இந்திய அளவில் வளர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
முகாமில் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சிகள் மற்றும் போட்டி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பல மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

