நுாற்றாண்டு பழமையான பள்ளிகள், கல்லுாரிகள் டில்லியில் கணக்கெடுப்பு
நுாற்றாண்டு பழமையான பள்ளிகள், கல்லுாரிகள் டில்லியில் கணக்கெடுப்பு
UPDATED : ஏப் 17, 2026 05:33 PM
ADDED : ஏப் 17, 2026 05:35 PM

புதுடில்லி:
'டில்லியில், நுாற்றாண்டு பழமையான பள்ளிகள், கல்லுாரிகள், ரயில்வே ஸ்டேஷன்களை தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்' என, எம்.சி.டி., எனும், டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மொகலாயர், ஆங்கிலேயர்கள் போன்றோரின் அடுத்தடுத்த படையெடுப்புகளால் டில்லியில் நிறைய நினைவுச் சின்னங்கள், நுாற்றாண்டு பழமை வாய்ந்ததாக உள்ளன. அவற்றை மத்திய, மாநில அரசுகளின் தொல்பொருள் ஆய்வுத்துறை கணக்கெடுத்து வருகிறது.
இந்நிலையில், டில்லி பெருநகரின் உள்ளாட்சி அமைப்புகள், விடுபட்டுள்ள பல கட்டடங்களை அடையாளம் காண வேண்டும் என, எம்.சி.டி.,க்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
அதன்படி, 100 ஆண்டுகளை தாண்டியுள்ள பல பழமையான ரயில்வே நிலையங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறிப்பாக, 1903ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும், டில்லி ரயில்வே ஸ்டேஷன், ஆஜ்மீரி கேட் பகுதியில் உள்ள ஆங்கிலோ - அராபிக் சீனியர் செகண்டரி பள்ளி, 1916 முதல் கரோல்பாக் பகுதியில் செயல்படும் திப்பியா கல்லுாரி ஆகியவை, தொல்பொருள் ஆய்வுத்துறையின் பழமையான கட்டடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன.

