முத்துார் நவா இன்டர்நேஷனல் காங்கயம் தாலுகாவில் முதலிடம்
முத்துார் நவா இன்டர்நேஷனல் காங்கயம் தாலுகாவில் முதலிடம்
UPDATED : ஏப் 17, 2026 07:25 PM
ADDED : ஏப் 17, 2026 07:26 PM

திருப்பூர்:
முத்துார் நவா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, காங்கயம் தாலுகா அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பள்ளியில் திவிஷ்னா 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் (ஆங்கிலம் 97, தமிழ் 99, கணிதம் 97, அறிவியல் 97, சமூக அறிவியல் 99); அஞ்சுகம் 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் (ஆங்கிலம் 95, தமிழ் 99, கணிதம் 95, அறிவியல் 98, சமூக அறிவியல் 97); தனுஸ்ரீ 483 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் (ஆங்கிலம் 98, தமிழ் 100, கணிதம் 95, அறிவியல் 97, சமூக அறிவியல் 93) பிடித்துள்ளனர்.
கவிஷ்னா (ஆங்கிலம் 94, தமிழ் 99, கணிதம் 95, அறிவியல் 98, சமூக அறிவியல் 94) மற்றும் தேஜஸ்வி (ஆங்கிலம் 98, தமிழ் 98, கணிதம் 95, அறிவியல் 94, சமூக அறிவியல் 95) ஆகிய இருவரும் 480 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஆசியா ஷகானி 479 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடம் பிடித்துள்ளார் (ஆங்கிலம் 94, தமிழ் 98, கணிதம் 95, அறிவியல் 94, சமூக அறிவியல் 98).
480க்கு மேல் 5 மாணவர்களும், 450க்கு மேல் 9 மாணவர்களும், 400க்கு மேல் 19 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவுக்கு தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார்; முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு ரொக்கத்தொகை மற்றும் பரிசுக் கேடயங்களை வழங்கினார்.
செயலாளர் சக்திவேல், நிர்வாக இயக்குனர் அசோக்குமார், முதல்வர் நிர்மலா தேவி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் ஆனுார்செல்வி நன்றி கூறினார்.

