கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு
UPDATED : ஏப் 23, 2026 10:36 PM
ADDED : ஏப் 23, 2026 10:37 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு வரும் 25ஆம் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அணிக்கு வீராங்கனைகள் தேர்வு வரும் 25ஆம் தேதி காலை 09:30 மணிக்கு கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் ரோடு, தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள சாய் கிரிக்கெட் அகடாமியில் நடக்கிறது.
தேர்வில் பங்கேற்க வருவோர் கடந்த 1996 வருடம் செப்., 1ம் தேதி முதல் 2014 வருடம் அக்., 31க்குள் பிறந்திருக்க வேண்டும். ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99440 00946 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

