sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு வழக்கறிஞர்கள் காலிபணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

அரசு வழக்கறிஞர்கள் காலிபணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

அரசு வழக்கறிஞர்கள் காலிபணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஜூன் 10, 2026 05:04 PM

ADDED : ஜூன் 10, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 05:04 PM ADDED : ஜூன் 10, 2026 05:06 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில், காலியாக உள்ள அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிகலாம் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில், காலியாக உள்ள அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா சட்டப்படி நியமனம் செய்யப்படுகிறார்கள். மேலும், அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு உரிமையியல் வழக்கறிஞர்கள் ஆகியோரும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில், 11 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கையும், மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த வழக்கறிஞர் தங்கள், சுயவிபர குறிப்புடன் கூடிய விண்ணப்பங்களை வரும், 30ம் தேதி மாலை, 05:45 மணிக்குள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us