தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வியும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்

கல்வியும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்

கல்வியும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்


UPDATED : ஜூன் 21, 2026 01:12 PM

ADDED : ஜூன் 21, 2026 01:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2026 01:12 PM ADDED : ஜூன் 21, 2026 01:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்:
அன்னூரில், நித்தில்யம் சிறப்பு பள்ளியில், ஆட்டிசம் பாதித்த மாணவர்கள் திருக்குறள் கூறும் குறளோசை நிகழ்ச்சி நடந்தது.

இதில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், கல்வியும், விடா முயற்சியும் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம். கல்வியுடன் ஒழுக்கம் மிக முக்கியம், என்றார்.

இதையடுத்து, கணித விடுகதை தெரிவித்து, சரியான பதில் தெரிவித்தவர்களுக்கு, சன்மானம் வழங்கினார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் திருக்குறள் வாசித்து அசத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நித்தில்யம் அறக்கட்டளை தலைவர் காயத்ரி சம்பத் பேசுகையில், “ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் சிறப்பு பள்ளிகளில் பயிற்சி முடித்து வெளியே வரும் போது அவர்களுக்கு வேலை வழங்க தொழில் நிறுவனங்களும், தமிழக அரசும் முன்வர வேண்டும்,” என்றார்.

அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us