மாணவர் விபரம் பதிவேற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு 11ம் தேதி கடைசி நாள்
மாணவர் விபரம் பதிவேற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு 11ம் தேதி கடைசி நாள்
UPDATED : அக் 06, 2025 10:34 AM
ADDED : அக் 06, 2025 10:35 AM
சென்னை:
பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியலை வழங்க, வரும் 11ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் விபரங்களை, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பதிவேற்றும்படி, இணைப்பு பள்ளிகளுக்கு இதுவரை எட்டு சுற்றறிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன.
வரும் 8ம் தேதிக்குள், ரசீது வழியாக மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்தலாம்; மற்ற பரிவர்த்தனைகளின் வாயிலாக, வரும் 11ம் தேதி வரை தேர்வு கட்டணம் செலுத்தலாம். இது, இணைப்பு பள்ளிகளுக்கான கடைசி வாய்ப்பு.
அதன்பின், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பட்டியலை பதிவேற்றவும், பணம் செலுத்தவும் உள்ள வசதி முடக்கப்படும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்து உ ள்ளது.