sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தோர் 5358 பேர்

/

நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தோர் 5358 பேர்

நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தோர் 5358 பேர்

நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தோர் 5358 பேர்


UPDATED : ஜன 25, 2025 12:00 AM

ADDED : ஜன 25, 2025 11:23 AM

Google News

UPDATED : ஜன 25, 2025 12:00 AM ADDED : ஜன 25, 2025 11:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை :
மதுரை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 9 பொறியியல் கல்லுாரிகள், 30 கலை, அறிவியல் கல்லுாரிகள், 13 பாலிடெக்னிக் கல்லுாரிகள், 9 தொழிற் பயிற்சி நிலையங்கள் என மொத்தம் 61 கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலவச திறன் பயிற்சிகள், குறைந்த கட்டணத்துடன் கூடிய பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட உள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமை பயிற்சிகள், உயர்கல்வி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மதுரையில் 2022 - 23முதல் இதுவரை 20 ஆயிரத்து 271 பொறியியல் கல்லுாரி மாணவர்கள், 45 ஆயிரத்து 966 கலை, அறிவியல் மாணவர்கள், 9673 பாலிடெக்னிக் மாணவர்கள் என 75 ஆயிரத்து 910 பேர் பயனடைந்துள்ளனர்.

5 ஆயிரத்து 358 பேர் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us