sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தாகூர் அரசு கலை கல்லுாரியில் ரூ.80 லட்சத்தில் வாசிப்பு கூடம்

/

தாகூர் அரசு கலை கல்லுாரியில் ரூ.80 லட்சத்தில் வாசிப்பு கூடம்

தாகூர் அரசு கலை கல்லுாரியில் ரூ.80 லட்சத்தில் வாசிப்பு கூடம்

தாகூர் அரசு கலை கல்லுாரியில் ரூ.80 லட்சத்தில் வாசிப்பு கூடம்


UPDATED : ஏப் 28, 2025 12:00 AM

ADDED : ஏப் 28, 2025 10:08 AM

Google News

UPDATED : ஏப் 28, 2025 12:00 AM ADDED : ஏப் 28, 2025 10:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி :
லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 80 லட்சம் ரூபாய் செலவில் வாசிப்பு கூடம் கட்டும் பணியை, அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.

லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நுாலகம் அருகே 80 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக வாசிப்பு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.

அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்று பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம், பேராசிரி யர்களுடன் கல்லுாரியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக, தாகூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், உயர் கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா, உறுப்பினர் செயலர் அசோக், பொதுப்பணித்துறை சிறப்புக் கட்டடம் செயற்பொறியாளர் கெஜலட்சுமி, கல்லுாரி முதல்வர் கருப்புசாமி, ஒருங்கிணைப்பாளர் வேலுராஜ், இளநிலைப் பொறியாளர் அனந்த பத்மநாபன், கட்டட ஒப்பந்ததாரர் அருணகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us