sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கிராமப்புற குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கான ஓட்டம்

/

கிராமப்புற குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கான ஓட்டம்

கிராமப்புற குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கான ஓட்டம்

கிராமப்புற குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கான ஓட்டம்


UPDATED : நவ 18, 2014 12:00 AM

ADDED : நவ 18, 2014 10:37 AM

Google News

UPDATED : நவ 18, 2014 12:00 AM ADDED : நவ 18, 2014 10:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மெரினாவில் கிராமப்புற குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கான ஓட்டம் நடந்தது. இதில் சர்வதேச கால்பந்து வீரர் கவ்ரமான் சந்த் உட்பட, 1,200 பேர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள யுரேகா குழந்தைகள் தொண்டு நிறுவனம், கிராமப்புற குழந்தைகள் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக ஓட்டம் நடத்தி வருகிறது. நேற்று, மெரினா கடற்கரை காந்தி சிலையில் இருந்து, உழைப்பாளர் சிலை வரை நடந்த ஓட்டத்தில், சர்வதேச கால்பந்து வீரர், கவ்ரமான் சிங், கல்லுாரி மாணவர்கள், பெருநிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து, யுரேகா குழந்தைகள் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: குழந்தைகள் தினத்தையொட்டி, இந்த ஆண்டு நடைபெற்ற ஓட்டத்தில், 350ரூபாய் வீதம் செலுத்தி, 1,200 பேர் ஓட்டத்தில் பங்கேற்றனர். இதன்மூலம் கிடைத்த பணம், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us