UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM
ADDED : ஜூன் 13, 2024 10:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பள்ளிகள் விதிமுறைகள் படி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பள்ளிகளில் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், பள்ளி பஸ்கள் அனைத்தும் விதிகளின்படி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி மாணவர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்யவும், உரிய காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும், பாடநுால்கள் வழங்குவதையும், தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.