UPDATED : டிச 23, 2024 12:00 AM
ADDED : டிச 23, 2024 10:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரபட்டி:
பழநி நெய்க்காரப்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி, ஸ்ரீ ரேணுகா தேவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவிகள், பள்ளி கல்வித்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற திறனறி தேர்வில் பங்கு பெற்றனர். இதில் ஹரிப்பிரியா மாவட்ட அளவில் முதலிடம், முத்துலட்சுமி இரண்டாம் இடம் பெற்றனர். மாணவிகளை பள்ளிச் செயலர் கிரிநாத், பவிதா, ஆட்சி குழு உறுப்பினர் ராஜ்மோகன், தலைமை ஆசிரியர் கதிர்வேல், ஆசிரியர்கள் பாராட்டினர்.