UPDATED : ஜன 16, 2025 12:00 AM
ADDED : ஜன 16, 2025 11:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், கூடுதலாக ஒரு பாதுகாப்பு அலுவலர், இரண்டு சமூகப் பணியாளர் பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனம் சாரா பாதுகாப்பு அலுவலர் பணிக்கு, 27,804 ரூபாயும், சமூக பணியாளருக்கு, 18,536 ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ளோர் சூளையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம், இம்மாதம், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 63691 14871 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.