sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாற்றுத்திறனாளி சிறுமி படிக்க சிறப்பு புத்தகங்கள்

/

மாற்றுத்திறனாளி சிறுமி படிக்க சிறப்பு புத்தகங்கள்

மாற்றுத்திறனாளி சிறுமி படிக்க சிறப்பு புத்தகங்கள்

மாற்றுத்திறனாளி சிறுமி படிக்க சிறப்பு புத்தகங்கள்


UPDATED : பிப் 26, 2025 12:00 AM

ADDED : பிப் 26, 2025 07:41 PM

Google News

UPDATED : பிப் 26, 2025 12:00 AM ADDED : பிப் 26, 2025 07:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழநாயக்கர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் மணி. நிலம்பூர் போச்சப்பாறையில் வசித்து வந்த இவர், வனப்பகுதியில் கடந்த மாதம் யானை தாக்கி உயிரிழந்தார்.

இவரது இளையமகள் மீனாட்சி, 12. மாற்றுத்திறனாளி. தந்தை மணி இறந்ததை அடுத்து, வனப்பகுதியில் இருந்து அரசு வழங்கியுள்ள விருந்தினர் இல்லத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

மீனாட்சி சார்ந்த பழங்குடியினர் பேசும் மொழி மலையாளம் மற்றும் கன்னடம் கலந்தது. இந்த மொழி பேசுவோர் அடர்ந்த வனத்தின் மையப்பகுதியில் வசிப்பதால், தற்போது மீனாட்சி குடும்பத்தினர் அந்த மொழியை யாருடனும் பேச முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், இந்த சிறுமியின் படிப்பை எஸ்.எஸ்.கே., எனப்படும், சமக்ரா சிக் ஷா கேரளா என்ற திட்டம் வாயிலாக செயல்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் வாயிலாக, வீட்டில் இருந்தபடி 6,168 பேர் படிக்கின்றனர். இதையடுத்து சிறுமி மீனாட்சி படிப்பதற்காக அவரது தாய்மொழியில் 30 ஆடியோ புத்தகங்களை கேரள கல்வித்துறை தயாரித்து உள்ளது.

இந்த புத்தகங்களை கொண்டு மீனாட்சியின் வீட்டுக்கு ஆசிரியைகள் நேரடியாக சென்று, அவருக்கு பாடம் கற்பிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us