sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோடை விடுமுறையில் அரசுப்பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி!

/

கோடை விடுமுறையில் அரசுப்பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி!

கோடை விடுமுறையில் அரசுப்பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி!

கோடை விடுமுறையில் அரசுப்பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி!


UPDATED : ஏப் 23, 2025 12:00 AM

ADDED : ஏப் 23, 2025 10:54 AM

Google News

UPDATED : ஏப் 23, 2025 12:00 AM ADDED : ஏப் 23, 2025 10:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
கோடை விடுமுறை நாட்களில் அரசுப்பள்ளி வளாகங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த, 17ம் தேதி ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து, துவக்கப் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டன. நாளை (24ம் தேதி) முதல் ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கு தேர்வு முடிந்து, நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. பள்ளி ஆசிரியர்கள் வரும், 30ம் தேதி வரை பள்ளிக்கு வருகை தர வேண்டும்; அட்மிஷன் பணிகளை கவனிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுமுறை விடப்படும்போது பாதுகாப்பு எப்படி என்பது புறநகரப் பள்ளிகள் பலவற்றில் கேள்விக்குறியாக உள்ளது. தலைமை ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்து மாலையில் திரும்புகின்றனர்; தொடர் விடுமுறை நாட்களில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைபவர்களும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரும் அதிகமாக உள்ளனர்.

சில துவக்கப்பள்ளிகளில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள், தலைமையாசிரியர் அறை, முகப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளியின் பின்பக்க சுவர் தாண்டி, கிடைக்கும் வழிகளில் எல்லாம் பள்ளிக்குள் ஏறி குதித்து உள்ளே வருகின்றனர் பலர். பள்ளி சொத்துக்களை சேதப்படுத்துவதோடு, கையில் கிடைக்கும் பொருட்களை திருடியும் செல்கின்றனர்.

தற்போது துவக்க பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ், கம்ப்யூட்டர், டிவி உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. பாதுகாவலர்கள் இல்லாததால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள காலை, மாலை பலர் பள்ளிக்கு வந்தாலும், நேரம் முடிந்த பின் சென்று விடுகின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் போது, பள்ளியில் என்னென்ன பொருட்கள் சேதமாகியிருக்கிறது என கணக்கெடுக்க வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரத்தில் அத்துமீறி பள்ளியில் நுழைபவர்கள், வகுப்பறைக்குள்ளும் நுழைந்து பெஞ்ச், டெஸ்க்குகளை சேதப்படுத்துகின்றனர்; விளையாட்டு தளவாடங்கள் காணாமல் போகின்றன. பள்ளி கழிப்பிடங்களை கூட அசுத்தம் செய்து விடுகின்றனர்.

பள்ளி கேட், வகுப்பறைகளை பூட்டி வைக்கலாம். வராண்டா, வளாகத்தை என்ன செய்ய முடியும்? அதிகளவில் மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிகளில் பாதுகாவலர்கள் உள்ளனர். துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பாதுகாவலர் இல்லை. குறிப்பாக, புறநகரில் செயல்படும் பள்ளிகளில் கண்காணிப்பு என்பது எல்லா நேரங்களிலும் இல்லை. பள்ளிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.பள்ளி மேலாண்மை குழு, போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் அவ்வப்போது தொடர் கண்காணிப்பில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் தேவையான பகுதிகளில் உடனடியாக பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us