sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு தேர்வில் டி.எஸ்.பி.,யான இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

/

அரசு தேர்வில் டி.எஸ்.பி.,யான இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

அரசு தேர்வில் டி.எஸ்.பி.,யான இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

அரசு தேர்வில் டி.எஸ்.பி.,யான இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு


UPDATED : செப் 05, 2025 12:00 AM

ADDED : செப் 05, 2025 10:26 AM

Google News

UPDATED : செப் 05, 2025 12:00 AM ADDED : செப் 05, 2025 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :
சென்னை மாநகர போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கொண்டே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி., ஆக தேர்வான ராமலிங்கத்தை, கமிஷனர் அருண் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

சென்னை மாநகர போலீசில், காவல் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ராமலிங்கம். கடந்த, 2011ம் ஆண்டில் சீருடை பணியாளர் தேர்வு வாரிய தேர்வில் வெற்றி பெற்று, எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார்.

நாகப்பட்டினம், அம்பத்துார், மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆகிய இடங்களில் பணிபுரிந்து உள்ளார். இந்த ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.

இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கொண்டே, அதிகாரிகள் ஒப்புதல் பெற்று கடந்தாண்டு, டி.என்.பி.எஸ்.சி., எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பங்கேற்றார். தேர்வில், டி.எஸ்.பி.,யாக வெற்றி பெற்று, பணி நியமன ஆணை பெற்றுள்ளார்.

இவரின் விடா முயற்சிக்காக, ராமலிங்கத்தை தன் அலுவலகத்திற்கு அழைத்து, கமிஷனர் அருண் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us