sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வனப்பகுதியை சுத்தம் செய்த கல்லுாரி மாணவர்கள்

/

வனப்பகுதியை சுத்தம் செய்த கல்லுாரி மாணவர்கள்

வனப்பகுதியை சுத்தம் செய்த கல்லுாரி மாணவர்கள்

வனப்பகுதியை சுத்தம் செய்த கல்லுாரி மாணவர்கள்


UPDATED : அக் 08, 2025 08:07 AM

ADDED : அக் 08, 2025 08:07 AM

Google News

UPDATED : அக் 08, 2025 08:07 AM ADDED : அக் 08, 2025 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், வனப்பகுதியின் இரு பக்கம் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளையும், பாட்டில்களையும் சுத்தம் செய்யும் பணிகளில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை, சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிகள் இடையே அமைந்துள்ளன. இந்த சாலை வழியாக தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையின் வழியாக செல்பவர்கள், வனப்பகுதியின் ஓரத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், குடிநீர் பாட்டில்கள், மது பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். இது இப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு, இதை சுத்தம் செய்யும் பணிகளில், மேட்டுப்பாளையம் வனத்துறையினருடன், மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் இணைந்து ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சசிகுமார் உத்தரவின் பேரில், குமரன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுகுணா மேற்பார்வையில், கல்லூரி மாணவர்களுடன், வனவர் சிங்காரவேலு, வனக்காப்பாளர்கள் முனுசாமி, ஹக்கீம், உதயன் உட்பட, 20 வனப் பணியாளர்கள், 64 மாணவ, மாணவியர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில்,10 மூட்டைகள் குப்பைகளை சேகரித்தனர்.






      Dinamalar
      Follow us