sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதுடில்லியில் பழங்குடியினர் கலை விழா தொடக்கம்

/

புதுடில்லியில் பழங்குடியினர் கலை விழா தொடக்கம்

புதுடில்லியில் பழங்குடியினர் கலை விழா தொடக்கம்

புதுடில்லியில் பழங்குடியினர் கலை விழா தொடக்கம்


UPDATED : நவ 25, 2025 10:49 AM

ADDED : நவ 25, 2025 10:50 AM

Google News

UPDATED : நவ 25, 2025 10:49 AM ADDED : நவ 25, 2025 10:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
புதுடில்லியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பழங்குடியினர் மாணவர் கல்வி சங்கம் சார்பில், புவிசார் குறியீடு பெற்ற பழங்குடியினர் கலைகளை முன்னெடுத்து பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் 3 நாள் கலை பயிலரங்கு மற்றும் கண்காட்சி நேற்று தொடங்கியது.

நவம்பர் 24 முதல் 26 வரை நடைபெறும் இந்நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளைச் சேர்ந்த 139 மாணவர்கள், 34 கலை மற்றும் இசை ஆசிரியர்களுடன் 10 பிரபல கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க விழாவில் பல மாநில மாணவர்கள் வழங்கிய பாரம்பரிய நடன, இசை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. ஒடிசாவின் தெம்சா நடனம், உத்தராகண்டின் ஜான்சரி நடனம், மிசோரம் நாட்டுப்புற நடனம், தாத்ரா-நாகர்ஹவேலியின் நாட்டுப்புறப் பாடல்கள், மத்தியப் பிரதேசத்தின் தேசபக்திப் பாடல்கள் கவனம் ஈர்த்தன.

பிரபல புவிசார் குறியீடு நிபுணர் ஸ்வேதா மேனன், பழங்குடி கலைகளின் அடையாளம் மற்றும் வருங்கால தேவைகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்.






      Dinamalar
      Follow us