UPDATED : ஏப் 03, 2026 07:19 PM
ADDED : ஏப் 03, 2026 07:20 PM
சென்னை:
படப்பையில், டி.ஏ.வி., ராசி பள்ளி, திறக்கப்பட்டது.
படப்பையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள டி.ஏ.வி., ராசி பள்ளியை, ராசி கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரங்கநாதன் மற்றும் டாக்டர் ரேணுகாதேவி, கல்வி குழும செயலர் விகாஸ் ஆரியா, ஆரிய சமாஜத்தின் தமிழக பிரிவு தலைவர் ராஜிவ் சவுத்ரி, கல்வி குழும இயக்குநர் சாந்தி அசோகன் ஆகியோர், திறந்து வைத்தனர். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
சாந்தி அசோகன் கூறியதாவது:
கடந்த 1886ல், லாகூரில் ஆரிய சமாஜத்தினர் சார்பாக துவங்கப்பட்ட டி.ஏ.வி., பள்ளி, நாடு முழுதும் திறக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் 1970ல் துவங்கப்பட்ட டி.ஏ.வி., பள்ளி, 55,000 மாணவ, மாணவியர் கல்வி பயிலும் குழுமமாக உயர்ந்துள்ளது. டி.ஏ.வி., பள்ளிகள், இந்திய பண்பாடு, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றை உள்ளடக்கிய, உயர்தர கல்வியை மாணவர்களுக்கு போதிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
படப்பையில் துவங்கப்பட்டுள்ள இந்த சி.பி.எஸ்.சி., பள்ளியில், தற்போது மழலை வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

