UPDATED : ஏப் 17, 2026 07:22 PM
ADDED : ஏப் 17, 2026 07:23 PM
திருப்புல்லாணி:
ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ். மடை அமிர்தா வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தது.
மாணவி நந்திகா வைஷ்வி 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், கனிஷ்கா 473 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், கமலா ஸ்ரீ 470 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம், பூமிகா ஸ்ரீ, சாய் கேசவ் 463 மதிப்பெண்கள் எடுத்து நான்காமிடம், அக்க்ஷதா 462 மதிப்பெண்கள் எடுத்து ஐந்தாமிடம் பெற்றனர்.
மேலும் 15 மாணவர்கள் 450க்கு மேல் மதிப்பெண்களையும், 43 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். மேலும் தமிழ் பாடத்தில் கமலி ஸ்ரீ நூறுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவர்களையும் பள்ளி மேலாளர் லட்சுமி அம்மா பாராட்டி வாழ்த்தி பேசினார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் கோகிலா ஆகியோர் உடனிருந்தனர்.

