புரவிபாளையம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
புரவிபாளையம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
UPDATED : மே 13, 2026 06:27 PM
ADDED : மே 13, 2026 06:29 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 2003ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது.
முன்னாள் தலைமையாசிரியர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். முன்னாள் உதவி தலைமையாசிரியர் சிவசாமி தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் குப்புசாமி, கணித ஆசிரியர் அனிதா மரி, விளையாட்டு ஆசிரியர் சரஸ்வதி, ஓவிய ஆசிரியர் தமிழ்ச்செல்வன், அறிவியல் ஆசிரியர் தேவி ஆகியோர் பங்கேற்று, முன்னாள் மாணவர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.
பழைய நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்கான உதவியை வழங்கினர்.
