sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உறைவிடப்பள்ளியில் இருந்து தப்பிய 2 மாணவர்களை மீட்ட போலீசார்

/

உறைவிடப்பள்ளியில் இருந்து தப்பிய 2 மாணவர்களை மீட்ட போலீசார்

உறைவிடப்பள்ளியில் இருந்து தப்பிய 2 மாணவர்களை மீட்ட போலீசார்

உறைவிடப்பள்ளியில் இருந்து தப்பிய 2 மாணவர்களை மீட்ட போலீசார்


UPDATED : நவ 29, 2024 12:00 AM

ADDED : நவ 29, 2024 08:08 AM

Google News

UPDATED : நவ 29, 2024 12:00 AM ADDED : நவ 29, 2024 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை சந்தை மேடு பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளராக வனஜா பணியாற்றி வருகிறார்.

பள்ளியில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொலுமலை, காட்டுநாயக்கன் தொட்டி பகுதியை சேர்ந்த, 10 வயது மாணவர்கள் இருவரும் படித்து வந்தனர். அவர்கள் நேற்று அதிகாலை பள்ளியிலிருந்து தப்பினர். நேற்று காலை மாணவர்கள் வருகை சரிபார்த்த போது மாணவர்கள் தப்பியது தெரிந்தது.

மாணவர்களின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகாரளித்தனர். போலீசார் உறைவிடப்பள்ளி மற்றும் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவர்கள் சுவர் ஏறி தப்பியதும், தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரிவதும் தெரிந்தது. மாணவர்களை மீட்ட போலீசார் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us