UPDATED : மே 15, 2026 04:34 PM
ADDED : மே 15, 2026 04:35 PM
சென்னை:
மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை, 2 சதவீதம் உயர்த்தி வழங்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அரசு அறிக்கை:
மத்திய அரசு பணியாளர்களுக்கு, ஜனவரி 1ம் தேதி முதல், 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர்.
இதனால், ஆண்டுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
