sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தொழில் பயிற்சி அட்மிஷன் வரும் 30 வரை நீட்டிப்பு

/

தொழில் பயிற்சி அட்மிஷன் வரும் 30 வரை நீட்டிப்பு

தொழில் பயிற்சி அட்மிஷன் வரும் 30 வரை நீட்டிப்பு

தொழில் பயிற்சி அட்மிஷன் வரும் 30 வரை நீட்டிப்பு


UPDATED : செப் 16, 2025 12:00 AM

ADDED : செப் 16, 2025 08:29 AM

Google News

UPDATED : செப் 16, 2025 12:00 AM ADDED : செப் 16, 2025 08:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:
அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், வரும் 30ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில், அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவின் கீழ், மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த கல்வியாண்டில், கடந்த ஜூன் மாதம் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. மொத்தம் உள்ள 104 சீட்களுக்கு நேற்று வரை, 61 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.இதனையடுத்து மாணவர்கள் சேர்க்கையை வரும், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழில் பயிற்சில் சேர எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

உயர்கல்வி படிக்க முடியாத மாணவர்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மாணவர்கள் வசதிக்காக, இம்மாதம், 30ம் தேதி வரை நேரடி அட்மிஷன் நடக்கிறது. கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us