sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நீட் முறைகேடு: கோத்ராவில் 5 பேரிடம் விசாரணை

/

நீட் முறைகேடு: கோத்ராவில் 5 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு: கோத்ராவில் 5 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு: கோத்ராவில் 5 பேரிடம் விசாரணை


UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM

ADDED : ஜூன் 28, 2024 08:01 AM

Google News

UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM ADDED : ஜூன் 28, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா:
நீட் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ., விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், பீஹாரின் பாட்னாவில் மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
தேர்வுக்கு முன்னதாக, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அங்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வைத்தே அவர்கள் விடைகளை மனப்பாடம் செய்துள்ளனர். இதற்காக மாணவர்களை அழைத்து செல்லும் பணியை மணீஷ் குமார் செய்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு குற்றவாளியான அசுதோஷ், மாணவர்கள் தங்க வசதி செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
5 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தின் கோத்ராவில் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ஜலராம் பயிற்சி மைய நிர்வாகி, மற்றும் தேர்வு எழுதியவர்களின் பெற்றோர்கள் 5 பேரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.






      Dinamalar
      Follow us