UPDATED : ஜூலை 26, 2011 12:00 AM
ADDED : ஜூலை 26, 2011 11:03 AM
அ நிறம் | அளவு
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி இலவசமாக பிசியோதெரபி மருத்துவ முகாம் நடத்துமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், அ.தி.மு.க., அரசிலும் தொடரும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அதன்படி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கை, கால்களின் நிலையை கண்டறிந்து, முன்கூட்டியே மாற்றுத்திறனாளிகள் உருவாகாமல் தடுக்கும் நோக்கில், இலவச மருத்துவ முகாம் நடத்தும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, ஜூலை 27ம் தேதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் (பிசியோதெரபி சிகிச்சை) நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
