UPDATED : பிப் 06, 2024 12:00 AM
ADDED : பிப் 06, 2024 10:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:
கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ், 2017- 19ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் பங்கேற்க இயலாத மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு, அகில இந்திய துணை தேர்வு, 2024 மார்ச் நடைபெற உள்ளது.துணை தேர்வு தொடர்பாக, முன்னாள் பயிற்சியாளர்கள், தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை, பிப்., 15க்குள் தொடர்பு கொண்டு, தேர்வு கட்டணம் செலுத்தி, துணை தேர்வில் பங்கேற்கலாம்.இத்தேர்வு பற்றிய விபரங்கள், http://skilltraining.tn.gov.in மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.