UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 10:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சமூக வலைதளங்களில் வெளியாகும், வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்களை நம்பி, முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்வாரியம் எச்சரித்துஉள்ளது.
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும், மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.
சந்தேகத்திற்கு இடமான செயல்பாடு ஏதேனும் இருந்தால், சைபர் கிரைம் இணையதளத்தை, https://cybercrime.gov.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம். மேலும், 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம். வேலைக்காக முன்பணம் எதுவும் கட்ட வேண்டாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.