UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:30 AM
மதுரை:
மதுரை சிம்மக்கல்லில் தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 40வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்க நகர் கிளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிளைத் தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பாபு வரவேற்றார். மாநில துணைத் தலைவர் அமுதன், பொதுச் செயலாளர் பக்தவத்சலம், மாவட்ட தலைவர் ரெங்கராஜன் பங்கேற்றனர். சிருங்கேரி சங்கர மடம் தர்மாதிகாரி நடேஷ்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது: முன்பொரு காலத்தில் அரசியலைப் பற்றி மட்டுமே பத்திரிக்கைகள் எழுதும். தினமலர் இதழில்தான் இன்றும் மக்கள் பிரச்னை குறித்தே விரிவாக எழுதுகின்றனர்.
அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனே பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுக்கின்றனர். இப்படி பத்திரிக்கை உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் டி.வி.ஆர். கன்னியாகுமரி மாவட்டம் இன்று தமிழகத்துடன் இருக்க முக்கிய காரணம் அவர், என்றார்.
கிளை பொருளாளர் சங்கர நாராயணன் நன்றி கூறினார். நிர்வாகிகள் ஸ்ரீநிவாசன், சந்திர சேகரன், மீனாட்சி சுந்தரம், வெங்கடாசலம் உடனிருந்தனர்.

