sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திருத்தணி இளைஞரின் குறும்படத்திற்கு விருது

/

திருத்தணி இளைஞரின் குறும்படத்திற்கு விருது

திருத்தணி இளைஞரின் குறும்படத்திற்கு விருது

திருத்தணி இளைஞரின் குறும்படத்திற்கு விருது


UPDATED : டிச 16, 2024 12:00 AM

ADDED : டிச 16, 2024 04:03 PM

Google News

UPDATED : டிச 16, 2024 12:00 AM ADDED : டிச 16, 2024 04:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த இளைஞர் தயாரித்த குறும்படத்திற்கு, ரஷ்யாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், சிறப்பு பிரிவில் விருது கிடைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 50. இவர், சூர்யநகரம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மகன் பிரவீன் குமார், 20, புளூ என்ற குறும்படத்தை இயக்கிஉள்ளார்.

இப்படம் கடந்த 5 முதல் 8ம் தேதி வரை, ரஷ்யாவில் அர்கான்ஜெல்ஸ்க் நகரில் நடந்த, ஆர்க்டிக் ஓபன் என்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றது. அந்த விழாவில் பலராலும் பாராட்டப்பட்டு, புளூ குறும்படத்திற்கு சிறப்பு பிரிவில் விருது கிடைத்து உள்ளது.

விழாவில் பங்கேற்க ரஷ்யா சென்று திரும்பிய இயக்குனர் பிரவீன்குமார் கூறியதாவது:

சிறுவனின் கனவுகளையும், அவற்றை அடையும் தீர்க்கமான பயணத்தையும் பற்றியே, புளூ படம் பேசுகிறது. குழந்தைகளின் மழலை தன்மையையும், இன்னிசையையும் வெளிப்படுத்தும் முயற்சியாக உருவாக்கப்பட்ட படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து, சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்துஉள்ளது மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவா தலைநகரான பனாஜியில், நவம்பர் 20 முதல் 28 வரை நடந்த மத்திய அரசின் சர்வதேச திரைப்பட விழாவில், நாளைய படைப்பாளிகளை அடையாளம் காணல் என்ற பிரிவில் புளூ குறும்படம் தேர்வாகி உள்ளது.






      Dinamalar
      Follow us