UPDATED : நவ 19, 2025 07:43 AM
ADDED : நவ 19, 2025 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை:
தமிழக ஆவண காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆய்வு செய்து, தமிழகத்தின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆராய்ச்சி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓராண்டுக்கு மாதம் 50,000 ரூபாய் ஆராய்ச்சி உதவித் தொகையுடன், அரிய ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ய, முதுகலை பட்டதாரிகள் அல்லது தனிநபர் ஆராய்ச்சியாளர்கள், https://tamilnaduarchives.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

