UPDATED : மார் 30, 2026 06:41 PM
ADDED : மார் 30, 2026 06:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்:
பாகூர் அரசு நடுநிலைப் பள்ளியில், 2026 - 27ம் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் துரைசாமி நோக்கவுரையாற்றினார். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பாகூர் நகர பகுதியில் பொது மக்களிடம், பள்ளியின் கட்டமைப்பு வசதி, கற்றல் முறைகள் குறித்து தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் பிரபாவதி, உமாமகேஸ்வரி, பாக்கியலட்சுமி, தம்பி ராஜலட்சுமி, ரம்யா, சங்கீதா, கார்த்திகேயன், செல்வி, சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.

