UPDATED : ஏப் 03, 2026 06:27 PM
ADDED : ஏப் 03, 2026 06:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த, 11ல் துவங்கியது. மொத்தம், 24,423 பள்ளி மாணவ, மாணவியர், 856 தனி தேர்வர் எழுதினர். சமூக அறிவியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது.
இத்துடன் தேர்வு நிறைவு பெற்றது. தேர்வு முடிந்தவுடன் வெளியே வந்த மாணவ, மாணவியர். துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வரும், 6ம் தேதி விருப்ப மொழி தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தாளவாடி, பனகஹள்ளியில் மட்டும் கன்னட மொழி எழுதுவோர் பங்கேற்பர்.

