UPDATED : ஏப் 10, 2026 11:16 AM
ADDED : ஏப் 10, 2026 11:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:
தமிழகத்தில் ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, தனியார் கல்லூரி மாணவ மாணவியர், 300க்கும் மேற்பட்டோர், நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், நாடகங்கள் நடத்தியும், ஓட்டளிக்க பணம் வாங்கக் கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

