sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 17, 2026 ,சித்திரை 4, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நுழைவுத் தேர்வில் சாதிப்பது எப்படி?

/

நுழைவுத் தேர்வில் சாதிப்பது எப்படி?

நுழைவுத் தேர்வில் சாதிப்பது எப்படி?

நுழைவுத் தேர்வில் சாதிப்பது எப்படி?


UPDATED : ஏப் 14, 2026 09:31 PM

ADDED : ஏப் 14, 2026 09:35 PM

Google News

UPDATED : ஏப் 14, 2026 09:31 PM ADDED : ஏப் 14, 2026 09:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களின் அடுத்த மிகப்பெரிய இலக்கு நுழைவுத் தேர்வுகளாகத் தான் இருக்கிறது. இந்த காலகட்டத்தில், அலைபேசி, சமுக வலைதளங்கள் மற்றும் வீட்டுச் சூழல் என பல வழிகளில் கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

படிப்பதற்கென தனி இடத்தைத் தேர்ந்தெடுங்கள்

வீட்டில் படிக்கும் போது படுக்கையிலோ அல்லது தொலைக்காட்சி இருக்கும் இடத்திலோ அமர்ந்து படிப்பதைத் தவிர்க்கவும். காற்றோட்டமான, போதிய வெளிச்சம் உள்ள ஒரு அமைதியான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் படிப்பு மேஜையில் தேவையற்ற பொருட்கள் இல்லாமல், பாடப்புத்தகங்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

முறையான கால அட்டவணை

திட்டம் இல்லாத உழைப்பு வீணாகிவிடும். எந்தெந்த நேரங்களில் எந்தெந்த பாடங்களைப் படிக்க வேண்டும் என்று ஒரு அட்டவணையை உருவாக்குங்கள். கடினமான பாடங்களுக்கு அதிக நேரத்தையும், எளிதான பாடங்களுக்குக் குறைவான நேரத்தையும் ஒதுக்குங்கள். மிக முக்கியமாக, அதிகாலை நேரத்தைப் படிப்பதற்குப் பயன்படுத்துங்கள்.

மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்துங்கள்

படிக்கும் நேரத்தில் அலைபேசியை வேறு அறையில் வைத்துவிடுங்கள். சமூக வலைதள அறிவிப்புகள் உங்கள் கவனத்தை எளிதில் சிதைக்கும். தேவைப்பட்டால் மட்டும் இணையதளத்தைப் பயன்படுத்துங்கள். படிக்கும் நேரத்தில் கைபேசியை 'டூ நாட் டிஸ்டர்ப்' பயன்முறையில் வைப்பது சிறந்தது.

சிறிய இடைவேளை எடுங்கள்

தொடர்ச்சியாக மணிக்கணக்கில் படிப்பது மூளையைச் சோர்வடையச் செய்யும். அதற்குப் பதிலாக, 25 முதல் 50 நிமிடங்கள் படித்துவிட்டு, 5 முதல் 10 நிமிடங்கள் சிறிய இடைவேளை எடுங்கள். இந்த இடைவேளையின் போது கண்களை மூடி ஓய்வெடுப்பதோ அல்லது தண்ணீர் குடிப்பதோ உங்கள் புத்துணர்ச்சியை அதிகரிக்கும்.

போதிய உறக்கமும் சத்தான உணவும்

தூக்கத்தைத் தவிர்ப்பது தவறு. ஒரு நாளைக்கு 7 - 8 மணிநேர ஆழ்ந்த உறக்கம் அவசியம். அப்போது தான் படித்த விஷயங்கள் நினைவில் நிற்கும். அதே போல், அதிக எண்ணெய் உள்ள உணவுகளைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்வது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

'நோ' சொல்ல பழகுங்கள்

நண்பர்கள் வெளியில் கூப்பிடும்போதோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கு வரும் போதோ தயங்காமல் உங்கள் இலக்கை அவர்களுக்குத் புரியவைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். இந்தச் சில மாதங்கள் நீங்கள் செய்யும் தியாகம், உங்கள் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும்.

சுய மதிப்பீடு மற்றும் பயிற்சி

வெறும் வாசிப்பு மட்டும் போதாது. முந்தைய ஆண்டு வினாத்தாள்களைத் தீர்த்துப் பார்ப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அதைச் சரிசெய்ய இது உதவும்.

நுழைவுத் தேர்வுகள் என்பது உங்கள் அறிவைச் சோதிப்பது மட்டுமல்ல, உங்கள் மன உறுதியையும் சோதிப்பவை. தற்காலிக இன்பங்களைத் தரும் கவனச்சிதறல்களைப் புறக்கணித்து, உங்கள் கனவுக் கல்லூரியில் சேருவதையே லட்சியமாகக் கொண்டு செயல்படுங்கள். விடாமுயற்சியும், திட்டமிட்ட உழைப்பும் உங்களை நிச்சயம் வெற்றியாளராக மாற்றும்!







      Dinamalar
      Follow us