sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பட்ஜெட்: தென் மாவட்டம் 1 லட்சம் புத்தகங்களுடன் நெல்லையில் நுாலகம்

/

பட்ஜெட்: தென் மாவட்டம் 1 லட்சம் புத்தகங்களுடன் நெல்லையில் நுாலகம்

பட்ஜெட்: தென் மாவட்டம் 1 லட்சம் புத்தகங்களுடன் நெல்லையில் நுாலகம்

பட்ஜெட்: தென் மாவட்டம் 1 லட்சம் புத்தகங்களுடன் நெல்லையில் நுாலகம்


UPDATED : மார் 15, 2025 12:00 AM

ADDED : மார் 15, 2025 10:40 PM

Google News

UPDATED : மார் 15, 2025 12:00 AM ADDED : மார் 15, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மேம்பட்ட வசதிகளுடன் புதிய நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது.

*பொதுமக்கள் பயன் பெறும் வகையிலும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன் பெறும் வகையிலும், தலா ஒரு லட்சம் புத்கங்கள் மற்றும் மாநாட்டு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன், திருநெல்வேலியில் நுாலகம் அமைக்கப்படும்.

*சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், புதிதாக கலை, அறிவியல் கல்லுாரி திறக்கப்படும்.

*மதுரை மாவட்டம் மேலுாரில், காலணி தொழிற்பூங்கா அமைக்கப்படும்

*துாத்துக்குடி மாவட்டத்தில், செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

*கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலையில், 1,000 மெகா வாட் திறனில், நீரேற்று மின் திட்டம், பொது - தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்.

*மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே, 11,368 கோடி ரூபாயில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெற அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் துவக்கப்படும்

*திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 'ரோப்வே' எனும் உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஆராயப்படும்.






      Dinamalar
      Follow us