UPDATED : மே 25, 2026 06:49 PM
ADDED : மே 25, 2026 06:50 PM
இடைப்பாடி:
கொங்கணாபுரம் ஆகநல் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், இடைப்பாடி தாலுகா அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். குறிப்பாக மாணவி வான்யா, 500க்கு, 496 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி தான்யாஸ்ரீ, கான்வல் ஆகியோர், 495 மதிப்பெண் பெற்று, 2ம் இடம் பிடித்தனர்.
பஹீமா, மவுஷிகா, நித்திஷ் ஆகியோர், 494 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடம் பிடித்தனர். இவர்களை, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர் ஒன்றிணைந்து பாராட்டினர். மேலும் பள்ளி சார்பில் கேடயம், நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டன.
ஆகநல் பள்ளி தலைவர் ஆயிக்கவுண்டன், நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம், தாளாளர் சரஸ்வதி, மூத்த கல்வி ஆலோசகர் நாராயணசாமி, முதல்வர் சிவசண்முகம், துணை முதல்வர் லதா கோபாலன், இணை துணை முதல்வர் பிரகாஷ் ரத்தினவேலு உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
