UPDATED : மே 01, 2026 06:10 PM
ADDED : மே 01, 2026 06:12 PM
உடுமலை:
திருப்பூர் மாவட்ட அளவிலான பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம், வரும் 11ம் தேதி காலை, 09:00 முதல் மாலை, 05:00 மணி வரை தாராபுரம் அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் நடக்கிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி/தோல்வி மற்றும் ஐ.டி.ஐ., முடித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் இதில் பங்கேற்கலாம்.
தேர்வானோருக்கு பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படுவதோடு, மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப்படும். சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் கிடைக்கும்.
கூடுதல் விபரங்களுக்கு 70220 45795, 95665 31310 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

