sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை புத்தக காட்சியில் ரூ.18 கோடிக்கு விற்பனை

சென்னை புத்தக காட்சியில் ரூ.18 கோடிக்கு விற்பனை

சென்னை புத்தக காட்சியில் ரூ.18 கோடிக்கு விற்பனை


UPDATED : ஜன 22, 2024 12:00 AM

ADDED : ஜன 22, 2024 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2024 12:00 AM ADDED : ஜன 22, 2024 05:06 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., விளையாட்டு மைதானத்தில், கடந்த 3ம் தேதி, 47வது சென்னை புத்தகக் காட்சி துவங்கியது.நேற்று வரை 19 நாட்கள் நடந்த இந்த புத்தகக் காட்சியை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி நடத்தியது. இதற்கு, 15 லட்சம் வாசகர்கள் வந்த நிலையில், 18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்று சாதனை படைத்துள்ளது.புத்தகக் காட்சி நடக்க உதவிய கொடையாளர்கள், நிறுவனங்களைச் சேர்ந்தோரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கவுரவித்தார்.அவர்களுடன், பதிப்பு பணியில் நுாறாண்டுகள் நிறைவு செய்த கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பதிப்புப் பணியில் நுாறாண்டுகள் நிறைவு செய்த பதிப்பாளர் எம்.ஆர். எம். அப்துற்றஹீம், பதிப்புப் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த மணிமேகலைப் பிரசுரம், மணிவாசகர் பதிப்பகம், மீனாட்சி புத்தக நிலையம்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரி நிலையம், பழனியப்பா பிரதர்ஸ், பூங்கொடி பதிப்பகம், ராஜ்மோகன் பதிப்பகம், சர்வோதய இலக்கியப் பண்ணை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் ஆகியற்றையும் பாராட்டி கவுரவித்தார்.அதேபோல், பதிப்புப் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த, 25 பதிப்பகங்களையும் கவுரவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us