sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்தல் பணி ஆசிரியர்கள் ஏப்.19ல் ஓட்டளிக்கலாம்

/

தேர்தல் பணி ஆசிரியர்கள் ஏப்.19ல் ஓட்டளிக்கலாம்

தேர்தல் பணி ஆசிரியர்கள் ஏப்.19ல் ஓட்டளிக்கலாம்

தேர்தல் பணி ஆசிரியர்கள் ஏப்.19ல் ஓட்டளிக்கலாம்


UPDATED : ஏப் 15, 2024 12:00 AM

ADDED : ஏப் 15, 2024 10:22 AM

Google News

UPDATED : ஏப் 15, 2024 12:00 AM ADDED : ஏப் 15, 2024 10:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர், ஆசிரியர்கள் ஏப்., 19 அன்று அந்தந்த ஓட்டுச்சாவடியில் தேர்தல் பணி சான்றினை பெற்று ஓட்டளிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

சிவகங்கை லோக்சபா தொகுதி தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தலாம். இந்த தொகுதியில் பணிபுரிபவராக இருப்பின் படிவம் 12 ஏ, வேறு தொகுதி வாக்காளர்கள் படிவம் 12 ன் படி விண்ணப்பம் பெறப்பட்டுள்ளன. படிவம் 12 பெற்ற இத்தொகுதியை சேர்ந்த பிற மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ், அரசு ஊழியர்கள் ஏப்., 11 முதல் 13 வரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தபால் ஓட்டு சேவை மையத்தில் தபால் ஓட்டினை நேரில் செலுத்தலாம்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பிற தொகுதியை சேர்ந்த அரசு அலுவலர், ஆசிரியர்களில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர் ஒன்று முதல் 3 வரையிலானவர்கள் அந்தந்த பயிற்சி மையங்களில் செயல்படும் தபால் ஓட்டு சேவை மையங்களில் ஏப்., 13 அன்று அடையாள சான்றினை சமர்பித்து தபால் ஓட்டினை அளிக்கலாம்.

இத்தொகுதியில் பணிபுரிந்து தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஏப்., 7 அன்று பயிற்சி மையத்தில் வழங்கிய தேர்தல் பணி உத்தரவை பெற்று, ஏப்., 19 அன்று பணிபுரியும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுக்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us