UPDATED : ஜூலை 02, 2026 02:26 PM
ADDED : ஜூலை 02, 2026 02:26 PM
அ நிறம் | அளவு
அன்னுார்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், வருவாய் ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர் உள்ளிட்ட, 749 பணியிடங்களுக்கு, 2025 செப்டம்பரில் எழுத்து தேர்வு நடந்தது. இதில், 5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்ற 10,000 பேருக்கு, மார்ச் 15ம் தேதி மெயின் தேர்வு நடைபெற்றது.
மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில், கோவை மாவட்டம், அன்னுாரில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் உள்ள நல்லிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு பிரியா, 25, என்பவர், அருந்ததியர் பிரிவில், தமிழகத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். பொது பிரிவில் தமிழக அளவில், 239ம் இடம் பிடித்துள்ளார்.
