sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இலவச கல்வி கற்பதற்கு 7,500 பேர் விண்ணப்பம்

/

இலவச கல்வி கற்பதற்கு 7,500 பேர் விண்ணப்பம்

இலவச கல்வி கற்பதற்கு 7,500 பேர் விண்ணப்பம்

இலவச கல்வி கற்பதற்கு 7,500 பேர் விண்ணப்பம்


UPDATED : மே 23, 2024 12:00 AM

ADDED : மே 23, 2024 10:39 AM

Google News

UPDATED : மே 23, 2024 12:00 AM ADDED : மே 23, 2024 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:
கோவை மாவட்ட தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச கல்வி பெற, 7,500 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான, 25 சதவீத இட ஒதுக்கீட்டில், தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., மற்றும் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

இதற்கு மே 20 வரை, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தில், 328 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, 15 ஆயிரத்து 619 இடங்கள் உள்ளன.

இதில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் கல்வி பயில, 3,950 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் சேர இதுவரை 7,500க்கும்மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்று, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us