UPDATED : மார் 31, 2026 08:48 PM
ADDED : மார் 31, 2026 08:50 PM
கண்டாச்சிபுரம்:
கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விருதகிரி அறக்கட்டளை நிறுவனர் ஜெயராமன், டாக்டர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் தேன்மொழி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் நடிகர் தாமு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இருவரும் இணைந்து தெளிவான வாழ்வியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளி ஆசிரியர்களுடன் இணக்கமான உறவை தொடர வேண்டும் என பேசினார்.
ஐ.டி.ஐ., மேலாளர் செல்லம்மாள், அருணை அச்சக உரிமையாளர் ரமேஷ், நடராஜ் ஐ.டி.ஐ., தாளாளர் மேகநாதன், வாரியார் இலக்கிய பேரவை பொருளாளர் பாரதிதாசன் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மெட்ரிக் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
மேலாளர் மஞ்சுளா நன்றி கூறினார்.

