UPDATED : ஏப் 19, 2026 10:17 AM
ADDED : ஏப் 19, 2026 10:18 AM
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி பாரத் கேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கு கல்லூரி தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்கள் பிரசன்னவெங்கடேசன், ரேணுகா, சுதா முன்னிலை வகித்தனர்.
எத்தியோப்பியா பகிர்தார் பல்கலை பேராசிரியர் முனைவர் முலுகென் ஜெகியே கெட்டி மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர் கண்ணன் ராமன் ஆகியோர் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.
வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் 420 பேர் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
சிறந்த படைப்புகள் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் முனைவர் அருள்குமார் வழங்கினார். ஏற்பாடுகளை மின்னணுவியல் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் பவுன்ராஜ், பேராசிரியர் விவேக், கல்லூரி மேலாளர் நாகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

